search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதி ஒதுக்கீடு"

    • கலெக்டர் அருண் தம்புராஜ், அய்யப்பன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்த னர்.
    • இரண்டாம் தளங்களுடனும், விடுதி கட்டிடம் 4 தளங்களு டனும் அமைய உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாதிரி பள்ளிக் கட்டிடம் மற்றும் ஆண்கள், பெண்களுக்கான புதிய மாதிரி பள்ளி விடுதி கட்டிடம் கட்ட ரூ.56.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து புதிய மாதிரி பள்ளிக் கட்டிடம் மற்றும் ஆண்கள், பெண்களுக்கான புதிய மாதிரி பள்ளி விடுதி கட்டிடம் கட்டுவதற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். கலெக்டர் அருண் தம்புராஜ், அய்யப்பன் எம்.எல்.ஏ. ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.

    இந்த கட்டிடத்தில் மாதிரி பள்ளிக் கட்டிடம் தரைதளம், முதல்தளம் மற்றும் இரண்டாம் தளங்களுடனும், விடுதி கட்டிடம் 4 தளங்களு டனும் அமைய உள்ளது.விழாவில் சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரிராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், போலீஸ் சூப்பிரண்டு ராஜா ராம், பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) பிரமிளா, எம்.கே.எம். எஸ் கன்ஸ்ட்ரக்சன்ஸ் பஷிருல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தாராபுரம் ஒன்றியத்தில் புதிய பாலம் அமைக்க 1.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • பணிகள் சுழற்சி முறையில் அனைத்து ஒன்றியங்களுக்கும் ஒதுக்கப்படுகிறது என்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் 2023-24ல் 10 ஒன்றியங்களில் 191 கி.மீ., நீளத்துக்கு 107.53 கோடி ரூபாய் மதிப்பிலான 44 ரோடு பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் திருப்பூர், மூலனூர், பல்லடம் ஒன்றியங்கள் விடுபட்டுள்ளன.

    அதன்படி அவிநாசி ஒன்றியத்தில் (15 கி.மீ., ரோடு) 10.56 கோடி ரூபாய், குடிமங்கலத்தில் (9.76 கி.மீ.,) ரூ.5கோடி, தாராபுரத்தில் (56 கி.மீ.,) - ரூ.33.11 கோடி, காங்கயத்தில் (21.39 கி.மீ.,) ரூ.11.99 கோடி, குண்டடம் (20 கி.மீ.,) - ரூ. 11.84 கோடி, மடத்துக்குளம் (4.05 கி.மீ.,) ரூ. 1.81 கோடி.

    பொங்கலூர் (7.36 கி.மீ.,) ரூ.3.13 கோடி, வெள்ளகோவில் (8.33 கி.மீ.,) ரூ.4.01 கோடி, ஊத்துக்குளி (13.84 கி.மீ.,) ரூ. 9.65 கோடி, உடுமலை (31.18 கி.மீ.,) ரூ.16.99 கோடி வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தாராபுரம் ஒன்றியத்தில் புதிய பாலம் அமைக்க 1.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறை பணிகள் தேர்வில் பாரபட்சம் காட்டுகின்றனர்.மத்திய, மாநில அரசு திட்டப்பணிகளை, அனைத்து ஒன்றியங்களுக்கும், பாரபட்சமின்றி பகிர்ந்து வழங்க வேண்டும். விரைந்து பணிகளை முடிக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.

    இது குறித்து, ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகளிடம் கேட்டபோது, விடுபட்ட ஒன்றியங்களுக்கு மற்றொரு திட்டங்களில் ரோடு பணி ஒதுக்கப்படும். பணிகள் சுழற்சி முறையில் அனைத்து ஒன்றியங்களுக்கும் ஒதுக்கப்படுகிறது என்றனர்.

    • துணை தலைவரின் இரண்டாமிடம் கையெழுத்திடும் அதிகாரத்தை மாவட்ட கலெக்டர் நிறுத்தி வைத்தார்.
    • ஒருமித்த கருத்து நிலவாததால் ஊராட்சியில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெற வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

    காரைக்குடி

    கடந்த கிராமப்புற உள் ளாட்சி தேர்தலில் சிவ கங்கை மாவட்டம் சங்கராபு ரம் ஊராட்சியில் தேவி மாங்குடி மற்றும் பிரியதர் ஷினி அய்யப்பன் ஆகியோர் வெற்றி பெற்றதாக சான்றி தழ் வழஙகப்பட்டது பெரும் சர்ச்சைக்குள்ளானது. தேவி மாங்குடி தரப்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, உயர்நீதி மன்றம் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றம தீர்ப்பின்படி தேவிமாங்குடி ஊராட்சி மன்ற தலைவராக பொறுப் பேற்றார்.

    இதனிடையே பொறுப்பு தலைவராக செயல்பட்டு வந்த பாண்டியராஜன் உள் பட சில உறுப்பினர்கள் ஒரு தரப்பாகவும், தேவிமாங் குடி உள்பட சில உறுப்பி னர்கள் ஒரு தரப்பாகவும் செயல்பட்டு வந்தனர். இவர்களிடையே ஒருமித்த கருத்து நிலவாததால் ஊராட்சியில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெற வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

    மேலும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கக்கூட முடி யாத நிலை இருந்து வந்ததும் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே துணை தலைவரின் இரண்டாமிடம் கையெழுத்திடும் அதிகாரத்தை மாவட்ட கலெக்டர் நிறுத்தி வைத்தார். அதனை எதிர்த்து துணைத் தலைவர் பாண்டியராஜன் தொடர்ந்த வழக்கு நிலுவை யில் இருந்து வருகிறது.

    கையெழுத்திடும் அதிகாரத்தை நிறுத்தி வைத்த உத்தரவு காலம் முடிவடைந்த நிலையில், தற்போது மழைக் காலம் என்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், அத்தியா வசிய பணிகளை மேற் கொள்ளவும், ஊழியர்க ளுக்கு ஊதியம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல பணிகளை மேற்கொள்ள ஏது வாக தமிழ்நாடு ஊராட்சி சட்டம் 1994 பிரிவு 203-ன் படி மாவட்ட கலெக்டர் மற்றும் ஊராட்சிகளின் ஆய்வாளரின் அவசரகால அதிகாரங்களின்படி அடிப் படை நிர்வாகம் செயல்பட ஏதுவாக சிற்றுராட்சிகளின் மீது விதிக்கப்பட்ட கடமைக ளில் முதல் நிலை கையொப் பமிட ஊராட்சிமன்ற தலை வருக்கு பதிலாக வட்டார வளர்ச்சி அலுவல ருக்கும் (கிராம ஊராட்சி), இரண்டா மிடம் கையொப்ப மிட ஊராட்சிமன்ற துணை தலைவருக்கு பதிலாக சம்பந்தப்பட்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் தற்காலிக மாக அனுமதி அளித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் உத்தர விட்டுள்ளார்.

    • ராமநாதபுரம் நகரில் பாதாள சாக்கடை பணிக்கு ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • சாக்கடை குழாய்கள் பதித்து பல ஆண்டுகளாகிவிட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சி யில் 33 வார்டுகளில் 2011 முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படு கிறது. பாதாள சாக்கடையின் மொத்த நீளம் 63.40 கி.மீ.உள்ளது. நகர் பகுதியில் சேகரிக்கப்படும் கழிவு நீரை வெளியேற்ற சிதம்பரம் பிள்ளை ஊருணி, சிங்காரத் தோப்பு, குண்டூருணி, நாக நாதபுரம், இந்திராநகர் ஆகிய 5 இடங்களில் கழிவு நீரை சேகரிக்க பம்பிங் நிலையங்கள் உள்ளன.

    இவற்றில் 4 இடங்களில் சேகரிக்கப்படும் கழிவு நீர் கடைசியாக இந்திரா நகர் பம்பிங் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு, கழுவூரணி யில் சாலைக்குடியிருப்பு பகுதியில் செயல்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை யத்திற்கு கொண்டு செல்லப் படுகிறது.

    நகர் பகுதியில் மொத்த முள்ள 1200 மென்ஹோல் களில் பலவற்றில் மண் மேடாகவும், குழாய்கள் சேத மடைந்தும், அடைப்புகள் காரணமாகவும் கழிவுநீர் தேங்குவதால் மக்கள் சிரமப் படுகின்றனர். இதையடுத்து புதிய குழாய்கள் மாற்றவும், புதிதாக பம்ப்பிங் மோட்டார் கள், பேட்டரிகள் வாங்கவும் ரூ.11 கோடி நிதி ஒதுக்கப் பட்டு இதற்கான டெண்டர் நடக்கிறது.இதுகுறித்து நகராட்சி பொறியாளர் ரெங்கராஜன் கூறுகையில் ராமநாதபுரம் நகரில் பாதாள சாக்கடை குழாய்கள் பதித்து பல ஆண்டுகளாகிவிட்டது. கழிவுநீர் மட்டுமின்றி மழை நீரும் புகுந்து விடுவதால் மென்ஹோல்கள் நிரம்பி பிரச்சினை ஏற்படுகிறது. நிரந்தரமாக பிரச்சினை உள்ள இடங்களை கண்டறிந் துள்ளோம். அவற்றை ரோபோ இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடக்கிறது. புதிதாக குழாய் மாற்றுவதற் கும், பம்பிங் நிலையங்களில் புதிய பேட்டரிகள், மோட் டார் வாங்கி மேம்படுத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளது என்றார்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கீடு
    • புதிய அலங்கார தரைகற்கள் பதிக்கும்பணி தொடக்க விழா நடந்தது.

    கன்னியாகுமரி :

    கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெருமாள்புரத்தில் அலங்கார தரை கற்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரத்திடம் அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதை தொடர்ந்து கொட்டாரம் பெருமாள்புரத்தில் ரூ.7 லட்சம் செலவில் புதிய அலங்கார தரைகற்கள் பதிக்கும்பணி தொடக்க விழா நடந்தது.

    அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தாமரை தினேஷ், கொட்டாரம் பேரூர் செயலாளர் ஆடிட்டர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெருமாள்புரம் கிளை அ.தி.மு.க. செயலாளர் தங்கவேல் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் கொட்டாரம் பேரூர் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வக்கீல் ராஜேஷ், ஊர்த்தலைவர் சுடலைமணி,செயலாளர் சந்திரகுமார், பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் கமால், கொட்டாரம் பேரூராட்சி 15-வது வார்டு கவுன்சிலர் தங்ககுமார், அரசு ஒப்பந்ததாரர்கள் சுதாபாஸ்கர், செல்வகுமார், ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாதேவன், அ.தி.மு.க. நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், சம்பூர்ண தேவராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பிரதமர் மீனவர்கள் நலனை மேம்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
    • ரூ.38,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

    சீர்காழி:

    சீர்காழி அருகே பூம்புகார் மீன்பிடி துறைமுக வளாகத்தில் மீனவர்களின் குறைகள் கேட்டறியும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தலைமை வகித்தார்.

    மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம்,மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா பேசுகையில், இந்திய கடலோர பாதுகாப்பின் கவசமாக மீனவர்கள் திகழ்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.

    எனவே மீனவர்களை கடலோர காவல் தெய்வங்கள் என்று அழைக்கலாம் பிரதமர் நரேந்திர மோடி மீனவர்கள் நலனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    மீனவர்களுக்கென தனி அமைச்சகத்தை ஏற்படுத்திய பெருமை அவரையே சேரும்.

    பிரதமரின் திட்டத்தால் கடைகோடியில் வசிக்கும் மீனவர்களும் பயனடைகிறார்கள் என்ற செய்தி மிகவும் வரவேற்கத்தக்கது என்றார்.

    மத்திய தகவல் ஒளிபரப்பு இணை அமைச்சர் எல் .முருகன் பேசும் போது மீனவர் நலன் சார்ந்த குழுக்களில் மீனவர் பிரதிநிதி இடம்பெற வேண்டுமென பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

    2014 - க்கு பிறகு மீனவர்களு க்காக ரூ 38.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

    நமது நாடு இறால் ஏற்றுமதியிலும் முதலிடம் வகிக்கிறது கடல் சார்ந்த பொருட்கள் என்று பதில் நான்காம் இடத்தில் உள்ளோம் விரைவில் முதல் இடத்தை பிடிப்போம் என்றார்.

    நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் பூம்புகார் சங்கர், பாஜக வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளர் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய தலைவர் முருகன் குறித்த பலர் கலந்து கொண்டனர். முடிவில் சந்திரபாபு நன்றி கூறினார்.

    தொடர்ந்து இந்தியன் ஓவர்சீஸ் முன்னோடி வங்கி மேலாளர் முத்துசாமி பூம்புகார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் நிஷாந்த் முன்னிலையில் நிதி உதவி க்கான காசோலைகள் மத்திய அமைச்சர்கள் வழங்கினர்.

    • ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் 6 கட்டிடங்கள் முடியும் நிலையில் உள்ளன.
    • 39 கட்டிடத்துக்கான பணிகள் விரைவில் தொடங்கும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சொந்த கட்டிடத்தில் இயங்கு கின்றன. சில மற்றும் வாடகை கட்டத்தில் இயங்குகின்றன. சில கட்டிடங்கள் கட்டி பல ஆண்டுகள் ஆவதால் பழுதாகி உள்ளன.

    ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் 45 ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, 6 கட்டிடங்கள் முடியும் நிலையில் உள்ளன.

    39 கட்டிடத்துக்கான பணிகள் விரைவில் தொடங்கும். இவை 15-ம் நிதி கமிஷன் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்படுகின்றன. கடம்பூரில் 2 குடியிருப்புகள் கட்டும் பணி தொடங்க உள்ளது. ஓசூரில் குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

    மலைப்பகுதியில் சேசன் நகர், தாளவாடியில் துணை சுகாதார நிலையம் குடியிருப்புடன் அமைய உள்ளது.

    இப்பணிகள் நிறை வடையும்போது மாவட்டத்தில் அனைத்து ஆரம்ப துணை சுகாதார நிலையங்களும் சொந்த கட்டிடத்தில் செயல்படும் என ஈரோடு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார். 

    • குண்டூர்-பிபிநகர் இரட்டை ரெயில் பாதை ரூ.2853.23 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது.
    • தற்போது சென்னையில் இருந்து ஐதராபாத் மார்க்கமாக குண்டூர் வழியாக 3 ரெயில்கள் செல்கிறது.

    சென்னை:

    ரெயில்வே துறையின் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அமைச்சரவை பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

    சுமார் ரூ.32,500 கோடி மதிப்பீட்டில் ரெயில்வே அமைச்சகம் 7 திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுத்துள்ளது.

    இதன் மூலம் 9 மாநிலங்களில் 35 மாவட்டங்களில் ரெயில்வே கட்டமைப்பு வசதி விரிவுப்படுத்தப்படுகிறது. இந்திய ரெயில்வேயின் தற்போதைய வலையமைப்பை 2339 கி.மீ. வரை உயர்த்தவும், ஆண்டுக்கு 200 மில்லியன் டன்கள் கூடுதல் சரக்கு போக்குவரத்து, அதிக போக்குவரத்து கொண்ட பகுதிகளில் மிகவும் உள் கட்டமைப்பை மேம்படுத்துதல் போன்ற திட்டங்களுக்கு இதன் மூலம் ஊக்கப்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டத்தில் ஆந்திர மாநிலம் குண்டூர்-பிபிநகர் 239 கி.மீ நீளமுள்ள ரெயில் பாதை இரட்டை பாதையாக மாற்றப்படுகிறது. இதனால் சென்னை-ஐதராபாத் இடையே 78 கி.மீ பயண தூரம் மிச்சமாகிறது.

    இதே போல் குட்டக்-விழியநகரம் இடையே 3-வது வழிப்பாதை அமைக்கப்படும் பட்சத்தில் இந்த வழித்தடத்தில் ஏற்படும் கால தாமதம் தவிர்க்கப்படுவதோடு சென்னை-கொல்கத்தா இடையே கூடுதல் ரெயில்களை இயக்கவும் உதவுகிறது.

    இதுகுறித்து ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், குண்டூர்-பிபிநகர் இரட்டை ரெயில் பாதை ரூ.2853.23 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் இந்த பாதையில் கூடுதலாக ரெயில்களை இயக்க முடியும்.

    சென்னை-ஐதராபாத் இடையே வந்தே பாரத் ரெயிலையும் இயக்கலாம். இந்த வழித்தடத்தில் ஒரு பாதை கடந்த சில வருடங்களுக்கு முன்பு மின்மயமாக்கப்பட்டது. தற்போது இந்த ஒரு வழிப்பாதையில் ரெயில் போக்குவரத்து அதிகமாக உள்ளது.

    பிபிநகர்-குண்டூர் வழி தடத்தில் ஒரே ஒரு ரெயில் மட்டுமே செல்கிறது. இதன் மூலம் சென்னை செல்லக்கூடிய ரெயில்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கால நேரம் மிச்சமாகிறது என்றார்.

    சென்னை கோட்ட மேலாளர் விஷ்வநாத் கூறும்போது, தெற்கு மத்திய ரெயில்வே இத்திட்டம் குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பித்து உள்ளது. இந்த இரட்டை ரெயில் பாதை திட்டம் 2027-28-ல் நிறைவடையும்.

    இந்த வழி திட்டம் இரட்டை பாதையாக மாறும்போது சென்னை-ஐதராபாத் இடையே பயண நேரம் குறைகிறது.

    தற்போது சென்னையில் இருந்து ஐதராபாத் மார்க்கமாக குண்டூர் வழியாக 3 ரெயில்கள் செல்கிறது. விஜயவாடா காழிபேட் வழியாக ஐதராபாத் செல்லும் சேர்மினார் எக்ஸ்பிரசின் பயண நேரம் 12 மணி நேரம் 50 நிமிடங்களாக உள்ளது. இரட்டை வழிப்பாதையாக மாறும்போது இந்த வழித்தடத்தில் 130 கி.மீ வேகத்தில் ரெயில்களை இயக்க முடியும்.

    மேலும் இது ரெயில்கள் தாமதமாக செல்வதையும் குறைக்க உதவும் என்று தெரிவித்தார்.

    இதே போல் ரூ.5 ஆயிரம் கோடி திட்ட செலவில் குட்டக்-விழியநகரம் இடையே 385 கி.மீ தூரத்திற்கு 3-வது வழிப்பாதை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை-கொல்கத்தா வழித்தடத்தில் பயண நேரத்தை குறைக்க உதவுகிறது.

    • ரெயில் பயணிகள் வசதி குழு பரிந்துரைத்த பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், மாவட்ட பிரசார அணி தலைவர் காமாட்சி ஆகியோர் உடனிருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகரில் பா.ஜ.க. கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் ரெயில் நிலையத்தை கடந்த மார்ச் மாதம் ரவிச் சந்திரன் தலைமையிலான பிற மாநில உறுப்பினர்கள் அடங்கிய ரெயில் பயணிகள் வசதிக்குழு ஆய்வு செய்தது. அப்போது நாங்கள் கொடுத்த கோரிக்கைகளின் படி ரெயில் நிலைய கிழக்கு பகுதியில் நுழைவுவாயில், அனைத்து நடைமேடைகளும் மேம்படுத்துதல், நகரும் படி வசதி, குடிநீர் வசதி, நவீன தங்கும் அறைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் செய் வதற்கு ரெயில் பயணிகள் வசதிகள் குழு பரிந்துரைத்ததின்பேரில் தற்போது அதற்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

    இதில் முதல் கட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.7 கோடியே 73 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளுக்கு பிரத மர் மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டியுள்ளார். இப்பணிகள் வருகிற மார்ச் மாதம் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து பணிகளை மேற்கொண்டு விருதுநகர் ரெயில் நிலையம் உலக தரத்தில் மேம்படும் என்பது உறுதி. இதற்காக பிரதமர் மோடி, நிதிமந்திரி நிர்மலா சீதாராமன், ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு விருதுநகர் மாவட்ட மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். மதுரையில் இருந்து அருப் புக்கோட்டை வழியாக தூத்துக்குடி வரையிலான அகல ரெயில் பாதை திட்ட பணியை கைவிடக்கூடாது. திட்ட பணியை விரைந்து முடித்து தென் மாவட்ட வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் உதவ வேண்டும் என மாவட்ட பா.ஜ.க. சார்பில் மாநில நிர்வாகிகள் மூலம் மத்திய அரசிடம் வலியு றுத்துவோம். உறுதியாக திட்டம் கைவிடும் வாய்ப்பு ஏற்படாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், மாவட்ட பிரசார அணி தலைவர் காமாட்சி ஆகியோர் உடனிருந்தனர்.

      கன்னியாகுமரி :

      கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறப்பட்டு இருப்ப தாவது:-

      கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்கல், கீழ்குளம் பேரூராட்சிகளில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கவும், கருங்கல் மீன்சந்தையை நவீன வசதிகளுடன் மேம்பாடு செய்து சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர். நான் கருங்கல், கீழ்குளம் பேரூராட்சிகளில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கவும், கருங்கல் மீன்சந்தையை நவீன வசதிகளுடன் மேம்பாடு செய்து சீரமைக்கவும் கேட்டு முதல்-அமைச்சர், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர், அரசு முதன்மை செயலாளர், மாவட்ட கலெக்டர் மற்றும் துறை அதிகாரிகளிடமும் தொடர்ந்து கோரிக்கை வைத்தேன்.

      அதனடிப்படையில் கருங்கல், கீழ்குளம் பேரூராட்சிகளில் மிகவும் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கவும், கருங்கல் மீன்சந்தையை நவீன வசதிகளுடன் மேம்பாடு செய்யவும் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டம், சிறப்பு சாலைகள் திட்டம் மற்றும் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. மொத்தம் ரூ.3 கோடியே 62 லட்சத்து 40 ஆயிரம் ஒதுக்கப்பட்டு நிர்வாக அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

      எனவே சாலை பணிகள் அனைத்துக்கும் சில வாரங்களில் டெண்டர் விடப்பட்டு பணிகள் உடனடியாக தொடங்கி சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது.

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      • பொது நிதி ஒதுக்கீடு பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
      • அ.தி.மு.க. ஆட்சியில் இதுபோன்று வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டதா? என பதில் கேள்வி எழுப்பினார்.

      மதுரை

      மதுரை மாநகராட்சி கூட்டரங்கில் மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி பொன் வசந்த் தலைமையில் நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் பிரவீன் குமார், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் சோலை ராஜா பேசுகையில் பேசுகை யில், முல்லை பெரியார் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் குறித்து விளக்க வேண்டும், பொது நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

      உடனே மேயர் அ.தி.மு.க. ஆட்சியில் இதுபோன்று வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டதா? என பதில் கேள்வி எழுப்பினார். இரு தரப்பிலும் கட்சியினர் கூச்சல் எழுப்பினர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் கவுன்சிலர்கள் தங்கள் பகுதியை சார்ந்த குறைகளை தெரிவித்தனர்.

      அப்போது 26- வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சொக்காயி பேசுகையில், கவுன்சிலர்களுக்கு சம் பளத்தை உயர்த்தி அறிவித்த முதல்-அமைச்சரை பாராட்டி கல்வெட்டு வைக்க வேண்டும் என்றும், எனது வாக்குக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் கூறினார். உடனே மேயர் இது ஜக்கம்மா வாக்கு என பதிலளித்தார். இதனால் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.

      • நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள வாரசந்தை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணா சிலை அருகே இயங்கி வருகிறது.
      • இங்குள்ள கல்மேடைகளில் கடையை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

      சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள வாரசந்தை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணா சிலை அருகே இயங்கி வருகிறது. தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த சந்தையில் மளிகை பொருட்கள், காய்கறி, ஆடு, கோழி ஆகியவற்றி வாங்கியும் விற்றும் வருகின்றனர். இங்குள்ள கல்மேடைகளில் கடையை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மேற்கூறையுடன் கூடிய 156 கடைகள், வணிகப் பயன்பாட்டிற்கான கான்கிரீட் தளங்களைக் கொண்ட 14 கடைகள், சைக்கிள் ஸ்டாண்ட், ஆட்டோ ஸ்டாண்ட், நவீன கழிப்பிட வளாகங்கள், 4 புறமும் சுற்றுச்சுவருடன் கூடிய 12,350 சதுர அடி பரப்பளவில் வார சந்தை புனரமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.2 கோடியே 78 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த கருத்து கேட்பு கூட்டம் நேற்று நகராட்சி கூட்ட அரங்கில் நகரமன்ற தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட நகர மன்ற துணைத் தலைவர் தனம், நகராட்சி பொறியாளர் பிரேமாஇ நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சந்தை வளாகத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட புளிய மரங்களை அகற்றாமல் பணியை தொடங்குவது என்றும், மழைநீர், கழிவு நீர் தேங்காமல் பாதுகாக்கவும், வணிக நிறுவன பயன்பாட்டிற்கு கூடுதலான கடைகளை கட்டுவது குறித்தும் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

      ×